தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்கிரிப்ட் ரைட்டர் சரியில்லை: ‘பங்கம்’ பண்ண தமிழிசை

 

Advertisement

மதுரை விமான நிலையத்தில் பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி: பாஜ, அதிமுக கூட்டணி பலமாக உள்ளது. தம்பி விஜய் சமீப காலமாக பெரிய கூட்டம் கூட்டுகிறார். அவரிடம் ஒன்று கூற வேண்டும். அவருக்கு ஸ்கிரிப்ட் எழுதித்தருபவர் சரியாக எழுதிக்கொடுக்க வேண்டும். ஏனென்றால் தம்பி விஜய் ரயில்வே, நாகப்பட்டினம் மீனவர்கள் குறித்து தவறான தகவல்களை சொல்கிறார். அவரது ஸ்கிரிப்ட் ரைட்டர் இவற்றை மீண்டும் சரி பார்க்க வேண்டும்.

அவருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், எங்களை போன்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். திடீரென்று அரசியலுக்கு வந்தவுடன் என்னவென்றே புரியாமல் இருக்கிறார் விஜய். வருபவர்கள் அவரை பார்க்க வருகிறார்கள், வாக்களிக்க வரவில்லை. வேலினை கையில் வாங்கும் போது தம்பி விஜய் செருப்புகளை கழற்றி இருக்க வேண்டும். அதை செய்யாதது அவரது தவறு. ஆரம்ப காலம் என்பதால் அவருக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன். மக்கள் உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். அதை தொண்டர்களுக்கும் அவர் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement