தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கல்லூரி மாணவர் கைது

காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாராபுரம் சாலை, பாரதியார் நகரில் உள்ள சமூகநீதி விடுதியில் 50 மாணவர்கள் தங்கி அருகிலுள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். விடுதி காப்பாளர் மாரிமுத்து (45), தற்காலிக வார்டனாக காங்கயம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவரான, கள்ளக்குறிச்சியை சேர்ந்த அரவிந்த் (24) என்பவரை 2 ஆண்டுகளாக விடுதியில் தங்கவைத்து மாத சம்பளம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது. இதில், திருப்பூர் சைல்டுலைன் அமைப்பை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியபோது விடுதியை சேர்ந்த மாணவர்கள், கல்லூரி மாணவர் அரவிந்த் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து நேற்று கலெக்டர் மனிஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது தற்காலிக வார்டனாக இருந்த கல்லூரி மாணவர் அரவிந்த், 8 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement