தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளியில் வளைகாப்பு நடத்தி மாணவிகள் ரீல்ஸ்: கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

வேலூர்: அரசு பள்ளியில் வளைகாப்பு நடத்தி ரீல்ஸ் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் அருகே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் சிலர் சக மாணவிக்கு பள்ளி வளாகத்திலேயே வளைகாப்பு நடத்துவது போன்று ஒரு ‘ரீல்ஸ்’ வீடியோ வைரலாகி வருகிறது. வளைகாப்புக்கு தேவையான வளையல், பூ, சந்தனம், பன்னீர் சொம்பு உட்பட எல்லா பொருட்களையும் வைத்து, மாணவிக்கு நலங்கு வைத்து வளைகாப்பு நடத்தி போட்டோ ஷூட் எடுத்துள்ளனர்.
Advertisement

இதைவிட உச்சகட்டமாக, வளைகாப்பு நடத்தப்போவதாக அழைப்பிதழ் தயார் செய்த மாணவிகள், அதில் வளைகாப்பு நடக்கும் தேதி, நேரம், இடம் என பதிவு செய்திருந்தனர். அழைப்பிதழ் மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சியை ரீல்ஸ் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றமும் செய்துள்ளனர். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. மாணவிகள் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஆசிரியர்கள், பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மாணவிகள் தொடர்பான பிரச்னை என்பதால் தீர விசாரித்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைக்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை அழைத்து விசாரித்துள்ளோம். அந்த பள்ளியில் மட்டும் மதிய உணவு இடைவேளையின் போது ஆசிரியர்களையும் மாணவிகளோடு அமர்ந்து சாப்பிட சொல்லியுள்ளோம். ஏற்கனவே பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி இதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். அந்த மாணவிகளின் பெற்றோரையும் அழைத்து பேச திட்டமிட்டுள்ளோம்’ என்றனர்.

Advertisement

Related News