தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை போக்சோ வழக்குகளில் போலீசார் அலட்சியம்

*கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
Advertisement

கோவை : கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் தொண்டாமுத்தூர் விராலியூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளிக்க வந்திருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன் குவிந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:எங்கள் பகுதியை சேர்ந்த 15 வயதான 9ம் வகுப்பு மாணவியை 38 வயதான டிராக்டர் டிரைவர் திருமணம் செய்து பாலியல் தொந்தரவு செய்தார். அவர் ஏற்கனவே 2 திருமணம் செய்துள்ளார். அவருக்கு குழந்தைகள் உள்ளனர். பள்ளி சென்ற மாணவியை ஏமாற்றி பேசி பழகி மிரட்டி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.

இந்த திருமணம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர். ஆனால், திருமணம் நடத்தி வைத்த அந்த டிரைவரின் சகோதரியை கைது செய்யவில்லை. அவர் ஊருக்குள் வந்து புகார் தந்தவர்களை மிரட்டும் வகையில் பேசிக்கொண்டிருக்கிறார். தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என அவர் எச்சரித்து வருகிறது.

அவர் மட்டுமின்றி மேலும் இந்த குழந்தை திருமண விவகாரத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் தப்ப விட்டு வேடிக்கை பார்க்கின்றனர். போலீசாரின் அலட்சிய நடவடிக்கையினால் பள்ளி சிறார்களை துன்புறுத்தல் செய்யும் நபர்கள், உடந்தையாக இருப்பவர்கள் தைரியமாக வெளியே சுற்றும் நிலைமை உருவாகி விட்டது. பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது.

போலீசார், குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர், சைல்ட் லைன் அமைப்பினர், சமூக நலத்துறையினர் குழந்தைகள் விவகாரத்தில் தொடர்ந்து அலட்சியமாக இருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவி விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், ’’ என்றனர்.

Advertisement