தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளி மாணவர்கள் தாக்கிய சம்பவம் ஆசிரியர்கள் திடீர் போராட்டம்

*கல்வி அதிகாரி பேச்சுவார்த்தை
Advertisement

சிவகாசி : சிவகாசி அருகே திருத்தங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியரை பள்ளி மாணவர்கள் தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு பள்ளி ஆசிரியர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சிவகாசி அருகே திருத்தங்கல்லில் எஸ்.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்தப் பள்ளியில் திருமங்கலத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். நேற்று முன்தினம் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது பிளஸ் 2 மாணவர்கள் 2 பேர் போதையில் வந்ததாக கூறப்படுகிறது.

இதனை ஆசிரியர் சண்முகசுந்தரம் கண்டித்ததால் மாணவர்கள் மது பாட்டிலால் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஆசிரியர் சண்முகசுந்தரம் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசிரியரை தாக்கிய 2 மாணவர்களை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் பள்ளியில் நிரந்தர போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் வலியுறுத்தி நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து ஆசிரியர்கள் அனைவரும் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பள்ளி வளாகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் மாவட்ட கல்வி அதிகாரி சுரேஷ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு திரும்பினர். இந்நிலையில் பள்ளி ஆசிரியர் சண்முகசுந்தரத்தை தாக்கிய மாணவர்கள் 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement

Related News