தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 மாணவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை: புதுச்சேரி பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி நேற்று ரூ.13,600 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது குடும்ப தலைவிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும், அரசு பள்ளியில் படித்து கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் 6வது பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10ம்தேதி கவர்னர் கைலாஷ்நாதன் உரையுடன் துவங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் பேசினர். தொடர்ந்து நேற்று காலை 9.30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடியது. அப்போது நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2025-2026ம் ஆண்டுக்கான ரூ.13,600 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:
Advertisement

*ஆண்டுதோறும் அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் மழைக்கால நிவாரணமாக வழங்கப்படும்.

*வரும் நிதியாண்டு முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தற்போது வழங்கப்படும் இலவச அரிசியோடு சேர்த்து 2 கிலோ கோதுமையும் இலவசமாக வழங்கப்படும்.

* விடுபட்ட மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படும். வாரத்தில் 2 நாட்கள் என்பதை மாற்றி தினமும் மாலை நேரத்தில் சிறுதானிய சிற்றுண்டி மற்றும் முட்டை வழங்கப்படும்.

*மருத்துவம், பொறியியல் பாடப்பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட சென்டாக் உயர்கல்வி நிதி, இனி அனைத்து பாடப்பிரிவுகளுக்கு வழங்கப்படும்.

*6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்குவிப்பு தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

*எவ்வித உதவித்தொகையும் பெறாத வறுமைக்கோட்டிற்குகீழ் வாழும் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1,000 உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூலம் ஓய்வூதியம் பெறும் அனைத்து தரப்பினருக்கும் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும்.

*மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ரூ.4000, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ரூ.5 ஆயிரம், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ரூ.6 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும்.

*இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.5 ஆயிரம், உதவித்தொகை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

*ஆதி திராவிடர், பழங்குடியின சமூகத்தில் 30வயது கடந்து திருமணம் ஆகாத, கணவரை இழந்த வேலையற்ற மகளிருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் நிதி வேலைக்கு செல்லும் வரை வழங்கப்படும்.

*ஆதி திராவிட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த முதியோர், விதவை, முதிர்கன்னி, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் முதியோர் ஓய்வூதியத்துடன் ரூ.500 கூடுதலாக வழங்கப்படும்.

*தாய், தந்தை இருவரையும் இழந்த ஆதி திராவிட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு 18 வயது முடியும் வரை கல்வி, அடிப்படை தேவைகளுக்காக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்று உள்ளது.

Advertisement

Related News