தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

50 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலின மக்கள் கோயிலில் வழிபாடு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பட்டியலின மக்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஐயனார் கோயிலில் சுவாமி வழிபாடு செய்தனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள அணைகரைக்கோட்டாலம் கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே கிராமத்தில் உள்ள ஐயனார் கோயிலில் சாமி வழிபாடு செய்ய மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

கடந்த 50 ஆண்டுகளாக இந்த நிலை இருந்து வந்துள்ளது. ஐயனார் கோயிலில் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டி பட்டியலின மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து ஐயனார் கோயிலில் சாமி வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இருதரப்பினருக்கிடையே பிரச்னை ஏற்படும் சூழல் உருவானது.

இதையடுத்து இருதரப்பினரையும் அழைத்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் லூர்துசாமி தலைமையில் அமைதி பேச்சு நடத்தப்பட்டது. அதில் நீதிமன்ற உத்தரவின்படி பட்டியலின மக்கள் ஐயனார் கோயிலில் சாமி வழிபாடு மட்டுமே செய்ய அனுமதிக்கப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று பட்டியலின மக்கள், மேளதாளத்துடன் ஐயனார் கோயிலுக்கு சாமி வழிபாடு செய்ய சென்றனர். அப்போது மேளதாளத்துடன் செல்லக்கூடாது எனவும் அமைதியான முறையில் சென்று சாமி வழிபாடு செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதனை ஏற்க மறுத்த பட்டியலின மக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளின் சமரசத்திற்குப் பிறகு பிறகு பட்டியலின மக்கள் ஐயனார் கோயிலில் சாமி வழிபாடு செய்தனர்.

Advertisement

Related News