தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கை ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் டிவிஷன் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை

Advertisement

சென்னை: சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கை ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் டிவிஷன் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் மீது தமிழக காவல்துறையினருக்கு எந்த தனிப்பட்ட பகைமை உணர்வு இல்லை எனவும் காவல் ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கடந்த மாதம் 4ம் தேதி யூடியூபர் சவுக்கு சங்கர், கோவை போலீசாரால் தேனியில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பல்வேறு ஊர்களின் அவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கஞ்சா வைத்திருந்ததாகவும் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மாதம்12ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை பொறுத்தவரை 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் 3வது நீதிபதி ஜெயச்சந்திரன் இவ்வழக்கு விசாரணை பட்டியலிடப்பட்டது. நேற்று பதில் மனு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியிருந்த நிலையில் மீண்டும் இன்று இந்த வழக்கு பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் இவ்வழக்கை தான் தொடர்ந்து விசாரிப்பதற்குப்பதிலாக, ஆட்கொணர்வு மனுக்களை விசாரிக்கக்கூடிய டிவிஷன் அமர்வுக்கு மாற்றம் செய்வதாகவும், இது தொடர்பாக இந்த வலக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்போது வழக்கறிஞர் தரப்பில் வழக்கை தள்ளிவைப்பது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைப்பதாகவும், அன்று டிவிஷன் அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் சவுக்கு சங்கரின் கைது தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதிக்கு, சவுக்கு சங்கர் மீது தமிழக காவல்துறையினருக்கு எந்த தனிப்பட்ட பகைமை உணர்வு இல்லை எனவும் காவல் ஆணையர் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.

 

Advertisement

Related News