தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வீட்டில் சோதனை: வருமானத்துக்கு அதிகமாக ரூ.8 கோடி சொத்துக்குவித்ததாக வழக்குப்பதிவு

Advertisement

திருவண்ணாமலை: அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வருமானத்து அதிகமாக 125 சதவீத அளவுக்கு சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ரூ.8 கோடி அளவுக்கு சொத்து குவித்த வழக்கு தொடர்பாக அவர் வீட்டில் சோதனையும் நடத்தப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமசந்திரன் வீட்டில் காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஆரணியில் உள்ள சேவூர் ராமசந்திரன் வீடு மட்டுமின்றி அவரது மகன்கள் சந்தோஷ் குமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 7 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நீடித்த நிலையில், சேவூர் ராமசந்திரன் வீட்டுக்கு முன்பாக அதிமுகவினர் திரண்டனர். அப்போது அவர்களில் ஒருதரப்பினர் தனியாக முழக்கங்களை எழுப்பியதால், மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக ஆட்சியில் 2016-2021 வரை இந்து சமயத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சேவூர் ராமசந்திரன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் வருமானத்துக்கு அதிகமாக 125% அளவுக்கு அதாவது ரூ.8 கோடி சொத்து குவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச்சட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் சேவூர் ராமசந்திரன், அவரது மனைவி மணிமேகலை, மகன்கள் சந்தோஷ்குமார், விஜயகுமார் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Related News