தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழப்பு..!!

சவுதி அரேபியா: சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நவம்பர் 9ம் தேதி ஹைதராபாத்தில் இருந்து 43 பேர் புறப்பட்டு மெக்காவில் உம்ரா தொழுகை நடத்திவிட்டு மதீனாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் அல் மீனா மற்றும் நம்பள்ளியில் உள்ள அல் மெக்கா டிராவல்ஸ் வழியாகப் பயணம் செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அதிகாலை 1.30 மணியளவில் முஃப்ரிஹாத் அருகே டீசல் லாரியும், மெக்கா விலிருந்து மதினாவுக்கு சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

Advertisement

இந்த விபத்தில் 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்து நடந்த நேரத்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததால் பேருந்தில் இருந்து வெளியேற முடியவில்லை. அவர்களில் பலர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்திலிருந்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மல்லேபள்ளியின் பசார்காட் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், இறந்தவர்களின் அடையாளங்களை அதிகாரிகள் இன்னும் சரிபார்த்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது, மேலும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி டெல்லியில் உள்ள அதிகாரிகள், தூதரக அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்குமாறு கேட்டுக் கொண்டார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உதவுவதற்காக அரசாங்கம் கட்டுப்பாட்டு அறை எண்களையும் வெளியிட்டுள்ளது - 91 7997959754 மற்றும் 91 9912919545. ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் 24x7 கட்டுப்பாட்டு அறையையும் அமைத்து உதவிக்காக கட்டணமில்லா உதவி எண்ணை (8002440003) வெளியிட்டுள்ளது.

Advertisement

Related News