தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாத்தூர் அருகே அதிகாலை பரபரப்பு; தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ: ரூ.25 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

சாத்தூர்: சாத்தூர் அருகே, இன்று அதிகாலை தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீயில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள பெரியார் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார் (38). இவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை மேட்டமலை ஊராட்சி, மடத்துக்காடு கிராமத்தில் உள்ளது. இங்கு தீக்குச்சி, தீப்பெட்டி ஆகியவற்றை இயந்திரத்தால் தயாரித்து வந்தனர். ஆலையில் 5க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று இரவு வழக்கம்போல வேலை முடிந்து தொழிலாளர்கள் ஆலையைப் பூட்டிச் சென்றனர்.

Advertisement

இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் ஆலையின் முன்பு கிடந்த கழிவு தீக்குச்சிகளில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென தொழிற்சாலைக்குள் இருந்த பொருட்களில் பரவி பற்றி எரிந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் உரிமையாளர் அருண்குமார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சாத்தூர், சிவகாசியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலையில் இருந்த இயந்திரம், தீக்குச்சிகள், மூலப்பொருட்கள் என ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். அதிகாலை நேரம் என்பதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

Advertisement

Related News