சத்தியமங்கலத்தில் செயல்படும் நிதி நிறுவனம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி: முதலீட்டாளர்கள் சாலை மறியல்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செயல்படும் டி.ஆர். கார்த்தி சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக முதலீட்டாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஏலச்சீட்டு காலம் முடிந்த பிறகும் பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்துவதாகவும், ஆட்களை வைத்து மிரட்டுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement