சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 6000 கன அடி உபரிநீர் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் அணையின் ஒழுங்குமுறை விதிகளின்படி 12.09.2025 அன்று முதல் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அன்று முதல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது (12.10.2025 காலை 6 மணி) வினாடிக்கு 6000 கனஅடி நீர் வெளியற்றப்பட்டு வருகிறது.
Advertisement
சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையின் காரணமாகவும், கிருஷ்ணகிரி அணையிலிருந்து வினாடிக்கு 7000 கனஅடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றபடுவதலும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8500 கன அடியாக உள்ளது. எனவே அணையிலிருந்து காலை 9.00 மணியளவில் வினாடிக்கு 9000 கன அடி அளவு வரை உபரி நீர் வெளியேற்ற படலாம் என தெரிவித்துக்கொள்ளபடுகிறது.
Advertisement