தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தர்மஸ்தலா விவகாரம்: கர்நாடக பா.ஜ எம்எல்ஏ மீது சசிகாந்த் எம்பி வழக்கு

பெங்களூரு:கர்நாடக மாநிலத்தின் தென்கனரா மாவட்டம், பெல்தங்கடி தாலுகா, தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் உடல் புதைக்கப்பட்டுள்ளதாக புகார் கொடுத்த சின்னய்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையில் தர்மஸ்தலாவில் பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாரின் பின்னால், தமிழ்நாட்டை சேர்ந்த மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில் கை வரிசை இருப்பதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக கர்நாடக முன்னாள் அமைச்சரும் தற்போதைய கங்காவதி தொகுதி சட்டப்பேரவை பா.ஜ எம்எல்ஏவுமான ஜனார்தனரெட்டி குற்றம் சாட்டி இருந்தார்.

Advertisement

அவரின் குற்றச்சாட்டிற்கு சசிகாந்த் செந்தில் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.இந்நிலையில் தர்மஸ்தலா விவகாரத்தில் தேவையில்லாமல், தன்னை தொடர்புப்படுத்தி பேசி இருப்பதன் மூலம் தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் குற்றச்சாட்டு கூறிய, ஜனார்தனரெட்டிக்கு எதிராக பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில், சசிகாந்த் செந்தில் எம்பி, நேற்று மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தார். அம்மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement