தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சொந்த ஊரான தசவாராவில் நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

Advertisement

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று காலமான பழம்பெரும் நடிகை பி.சரோஜாதேவியின் உடல், அவரது சொந்த ஊரான தசவார கிராமத்தில் அரசு முழு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முதல்வர் சித்தராமையா உள்பட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் நடிகை பி.சரோஜாதேவி, நேற்று காலை 9 மணியளவில் காலமானார். அவரது உடல் பெங்களூரு மல்லேஷ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரவது உடலுக்கு நடிகர்கள் சிவராஜ்குமார், பிரகாஷ்ராஜ், உபேந்திரா, சாதுகோகிலா, நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜக்கேஷ், இயக்குனர் யோகராஜ்பட், நடிகைகள் காஞ்சனா, தாரா அனுராதா, மாலா, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.

இந்நிலையில் வெளி மாவட்ட சுற்றுபயணத்தில் இருந்த முதல்வர் சித்தராமையா, நேற்று இரவு பெங்களூரு திரும்பினார். நேற்று காலை மல்லேஷ்வரத்தில் உள்ள நடிகை சரோஜாதேவி வீட்டிற்கு சென்ற முதல்வர் சித்தராமையா, அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். மல்லேஷ்வரத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு நேற்று அதிகாலை முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சரோஜாதேவியின் உடல் ஊர்வலமாக பெங்களூரு தெற்கு மாவட்டம், சென்னபட்டன தாலுகா, தசவார கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கிராமத்தில் உள்ள குடும்ப பண்ணை தோட்டத்தில் சரோஜாதேவியின் தாய் ருத்ரம்மா சமாதி அருகில் ஒக்கலிக வகுப்பினரின் வழக்கப்படி சம்பரதாய பூஜைகள் செய்யப்பட்டது.

நடிகை சரோஜாதேவியின் நடிப்பை பாராட்டி ஓன்றிய அரசின் சார்பில் பத்ம மற்றும் பத்மபூஷண் விருதும், கர்நாடக மாநில அரசின் சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவா மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிவுள்ளதால், அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யும்படி பெங்களூரு தெற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டதை தொடர்ந்து, முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Advertisement