தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திரையுலகில் என்னைத் தாங்கிப்பிடித்த ஒரு தங்கத் தூண் சாய்ந்துவிட்டதே :ஏவி.எம்.சரவணன் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்!!

சென்னை :கவிஞர் வைரமுத்து திரைப்பட தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது,

Advertisement

"மதிப்புக்குரிய

ஏவி.எம்.சரவணன்

இயற்கை எய்திவிட்டார்

இன்று

என் அதிகாலையின் இருள்

வடியவே இல்லை

என்னசொல்லிப் புலம்புவது?

44 ஆண்டுகால நட்பு

காலமாகிவிட்டது என்று

கலங்குவேனா?

ஏவி.எம்மின் அடையாளம்

போய்விட்டதே என்று

வருந்துவேனா?

ஆயிரம் பறவைகளுக்குக்

கனி கொடுத்த

கலை ஆலமரத்தின்

கிளை முறிந்ததே என்று

வாடுவேனா?

திரையுலகில்

என்னைத் தாங்கிப்பிடித்த

ஒரு தங்கத் தூண்

சாய்ந்துவிட்டதே என்று

கலங்குவேனா?

கலையுலகில்

எங்களது சந்திப்பு மையம்

வெறிச்சோடிவிட்டதே என்று

விசும்புவேனா?

நண்பர் சகோதரர் வழிகாட்டி

இனி யார் உண்டு என்று

தவிப்பேனா?

தமிழ்த் திரையுலகின்

வரலாறு சொல்லும் ஆசிரியர்

மறைந்துவிட்டாரே என்று

பதைப்பேனா?

புரியவில்லை

எனது மகா ரசிகர்

ஏவி.எம் நிறுவனத்தில்

அதிகமான பாடல்

எழுதிய கவிஞர் என்ற

அருமையான பெருமையை

எனக்களித்தவர்

எல்லாராலும் மதிக்கப்பட்ட

வெள்ளுடை ஆளுமை

கையொடிந்து தவிக்கிறது

இன்று கலையுலகம்

அவரை இழந்துவாடும்

குடும்பத்தார்க்கும்

கலையுலகத்துக்கும்

என் ஆழ்ந்த இரங்கலைத்

தெரிவிக்கிறேன்

அவர் நினைவுகள்

நீடு வாழும்

என் ஆறாத்துயரம் ஆறுவதற்குக்

காலமே கைகொடு,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News