தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜவில் ஐக்கியமான சரத்குமார்: தோல்வியை தழுவிய ராதிகா

சென்னை: பாஜவுடன் கட்சியை இணைத்ததால் சரத்குமார் மீது நிலவிய அதிருப்தி காரணமாக, விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட அவரது மனைவி ராதிகா சரத்குமார் தோல்வியை தழுவியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த கட்சியின் தலைவர் சரத்குமார், பாஜ கூட்டணியில் இணைந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தனது கட்சியை கடந்த மார்ச் 12ம் தேதி திடீரென பாஜவோடு இணைத்துக் கொண்டார்.
Advertisement

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவுடன் சரத்குமார் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது கட்சியை கலைத்து, பாஜவுடன் இணைத்தது அக்கட்சியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாஜவில் விருதுநகர் தொகுதியானது சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி, அவர் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜ வேட்பாளராக போட்டியிட்டார்.

இந்த தொகுதியில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மாணிக்கம் தாகூரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோரும் போட்டியிட்டனர். இதனால் இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றது.  இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மற்றும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இருவரும் மாறி மாறி முன்னிலைக்கு வந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் ராதிகா மற்ற வேட்பாளர்களுக்கு கடுமையாக போட்டி ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் அவரால் முன்னிலை பெற முடியவில்லை. 3வது இடத்திலேயே தொடர்ந்து இருந்தார்.

இவரது வெற்றிக்காக சரத்குமார் கோயிலில் அங்கப்பிரதசட்னம் செய்த வீடியோ வைரலானது. ஆனாலும் தேர்தலில் தோல்வியை தழுவியது சரத்குமார் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடம் நன்கு பிரபலமான ராதிகாவை விட, விஜயகாந்த மகன் கடும் போட்டி ஏற்படுத்தினார். ஆனால் ராதிகாவால் போட்டியை ஏற்படுத்த முடியவில்லை. பாஜவுடன் கட்சியை சரத்குமார் இணைத்ததால் ஏற்பட்ட அதிருப்தியே ராதிகா தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Advertisement

Related News