தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொல்லிமலை அடிவாரத்தில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் செழித்து வளர்ந்த மரக்கன்றுகள்

சேந்தமங்கலம் : கொல்லிமலை அடிவாரத்தில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள், மழையால் செழித்து வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது.
Advertisement

நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்குகிறது.

தமிழகம் மட்டுமின்றி அண்டைய மாநிலங்களிலிருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அடிவாரம் காரவள்ளியில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து கொல்லிமலைக்கு செல்ல வேண்டும். மலைச்சாலையில் எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சியளிக்கும்.

காரவள்ளி வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து 10 கொண்டை ஊசி வளைவுகள் வரை இரு புறங்களிலும் மூங்கில் மரங்கள் அடர்ந்துள்ளது. கடந்த ஆண்டு கோடை காலத்தில் அடிவார பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில், 10வது கொண்டை ஊசி வளைவுகள் வரை, மலைப்பாதையின் இருபுறங்களிலும் மரங்கள் எரிந்து நாசமானது. ஆயிரக்கணக்கான மரங்கள் கருகியதால், அதனை ஈடுகட்டும் வகையில், வனத்துறையினர் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, புதிய மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வந்தனர்.

ஆடு -மாடுகள் கடிக்காத வகையில் மூங்கில் கூண்டுகள் அமைக்கப்பட்டு, டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளுக்கு பாய்ச்சி வளர்த்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கொல்லிமலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வனத்துறையினரால் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள் அடர்த்தியாக செழித்து வளர்ந்து, பசுமையாக காட்சியளிக்கிறது. கொல்லிமலைக்கு சுற்றுலா வரும் பயணிகள், பசுமையான வனப்பகுதியை ரசித்தவாறு செல்கின்றனர்.

Advertisement

Related News