தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகைப் பூ விலை உயர்ந்து விற்பனை

 

Advertisement

தென்காசி: சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,500க்கு விற்பனையாகி வருகிறது. பனிமூட்டத்தால் மல்லிகைப் பூ வரத்து குறைந்ததால் வழக்கத்தை விட ரூ.1,000 வரை அதிகமாக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 2,500க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளதால், இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக தென்காசி, சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு பூக்களை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுவதாலும் மல்லிகை பூவின் விளைச்சல் குறைந்துள்ளது.

இதனால் சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு வரக்கூடிய மல்லிகை பூ குறைந்ததாலும், இந்த மாதத்திற்கான கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதாலும் மல்லிகை பூவின் விலை வரலாறு காணாத விலையேற்றம் ஏற்பட்டுள்ளது இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த காலங்களிலும் சில சமயங்களில் இது போன்ற விலை ஏற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த சில நாட்களில் இதே போன்ற விலை உயர்வுகள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக, சுபமுகூர்த்த தினத்தை ஒட்டி பிச்சிப்பூ விலை ரூ. 2,100 இலிருந்து ரூ. 3,000 ஆக உயர்ந்தது. ங்கரன்கோவில் மலர் சந்தைக்கு குறைந்த அளவு பூக்கள் வந்ததே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகளவு பூக்கள் கொள்முதல் செய்யப்படுவதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News