தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

500 தூய்மைப் பணியாளர்கள் மூலம் 24 மணி நேரமும் கோயம்பேடு மார்க்கெட்களில் தினமும் 15 டன் குப்பை அகற்றம்

 

Advertisement

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு காய்கறி, பழம், பூ மற்றும் உணவு தானிய மார்க்கெட்டில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி நேற்று ஆய்வு செய்தார். அப்போது மாக்கெட்டில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்றுவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்படி, சீனிவாச வேஸ்ட் மேனேஜ்மென்ட் ஒப்பந்ததாரர் நிறுவனத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 24 மணி நேரமும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மார்க்கெட்டில் சேர்ந்துவரும் தினமும் சுமார் 15 டன் குப்பை கழிவுகளை அகற்றி வருகின்றனர்.

இதுகுறித்து அங்காடி நிர்வாகம் கூறுகையில், ‘’வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக கோயம்பேடு மார்க்கெட்டில் குப்பைகள் சேராதவாறு உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. மார்க்கெட் வளாகத்தில் உள்ள மழைநீர் கால்வாய் பகுதியில் குப்பைகள் சேராதவாறு அகற்றும் பணியில் தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தினமும் 1000 டன்கள் வரை குப்பை அகற்றப்பட்டு வருகின்றன. குப்பை கொட்டுவதற்கான சாதனங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

தற்போதுள்ள 300 தூய்மைப் பணியாளர்களுடன் கூடுதலாக 200 பணியாளர்களை நியமித்து குப்பைகள் அகற்றப்படுவதுடன் மாதம் ஒருமுறையாவது மாஸ் கிளீனிங் செய்துவருகிறோம்’’ என்றனர்.

Advertisement

Related News