தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அரசு தயார்: அமைச்சர் தங்கம் தென்னரசு
01:03 PM Aug 14, 2025 IST
சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் 12 கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரசின் கதவுகள் பேச்சுவார்த்தைக்கு திறந்திருக்கிறது. அனைவரும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.