தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டவிரோத மதமாற்ற புகார்; சங்கூர் பாபாவுக்கு ரூ.60 கோடி வெளிநாட்டு நிதி கண்டுபிடிப்பு: அமலாக்கத்துறை தகவல்

Advertisement

புதுடெல்லி: சட்டவிரோத மதமாற்றப்புகாரில் சிக்கிய சங்கூர் பாபாவுக்கு வெளிநாடுகளில் இருந்து ரூ.60 கோடி நிதி வந்துள்ளது தெரிய வந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பால்ராம்பூர் பகுதியை சேர்ந்தவர் சங்கூர் பாபா என்கிற ஜலாலுதீன் என்கிற கரியமுல்லா ஷா. இவர் மீது சட்டவிரோத மத மாற்றம் செய்ததாக உபி அரசு வழக்கு பதிவு செய்தது. மேலும் பண மோசடி வழக்கு உள்ளிட்ட வழக்குகளை அவர் மீதும், அவரது மகன் மெஹபூப், நண்பர்கள் நவீன் ரோஹ்ரா என்கிற ஜமாலுதீன், நஸ்ரீன் என்கிற நீது ஆகியோர் மீது தொடரப்பட்டது. இவர்களை உபி பயங்கரவாத தடுப்பு படை கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்த நிலையில் சங்கூர் பாபா தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதை தொடர்ந்து சங்கூர் பாபா, வெளிநாட்டிலிருந்து 22 வங்கிக் கணக்குகளில் ரூ.60 கோடி பெற்றிருப்பதைக் கண்டறிந்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது. சங்கூர் பாபாவும் அவரது கூட்டாளிகளும் பல்ராம்பூரில் உள்ள சந்த் அவுலியா தர்காவின் வளாகத்தில் இருந்து செயல்படும் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அங்கு இந்திய மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் இருவரும் கலந்து கொள்ளும் பெரிய கூட்டங்களை நடத்தி வந்ததாகவும் இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று அதை அசையா சொத்துகளாக வாங்கி குவித்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே சங்கூர் பாபா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்ராம்பூரில் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானங்களை உபி அரசு இடித்து தள்ளியது.

Advertisement

Related News