தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சந்தேஷ்காலி போராட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு பாஜ பணம் கொடுத்தது அம்பலம்: கட்சி பிரமுகர் பேசும் வீடியோ வெளியானதால் பரபரப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலி பகுதி திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜகான் ஷேக் என்பவரை ரேஷன் விநியோக ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. ஷாஜகானும், அவரது ஆதரவாளர்களும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக பெண்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், சந்தேஷ்காலியில் போராட்டம் நடத்திய பெண்களுக்கு பாஜவினர் தலா ரூ.2000 கொடுத்து அழைத்து வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
Advertisement

சந்தேஷ்காலி வட்டார பாஜ தலைவர் கங்காதர் கயல் என்பவர் பேசும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற 70 பெண்களுக்கு தலா ரூ.2000 கொடுத்துள்ளதாக கங்காதர் பேசுவதை கேட்க முடிகிறது.அதில் பாலியல் ரீதியாக பெண்கள் துன்புறுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டது என்றும் மாநில சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரியின் வற்புறுத்தலின் பேரில் இவ்வாறு கூறுவதற்கு பெண்கள் நிர்பந்தப்படுத்தப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார். ஆனால்,அந்த வீடியோக்கள் போலி என்று பாஜ கூறியுள்ளது. திரிணாமுல் செய்தி தொடர்பாளர் ரிஜூ தத்தா,‘‘ சந்தேஷ்காலி விவகாரத்தில் பாஜவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலி என்பது அம்பலமாகியுள்ளது’’ என்றார்.

Advertisement

Related News