தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சந்தன மரங்களை வெட்டி கடத்திய கும்பல்: போலீசார் விசாரணை

கோவை: கோவை காந்திமாநகர் மாநகராட்சி பூங்காவில் இருந்த 4 சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாநகர் பகுதியில் பொது இடங்கள், வீடுகள், பூங்காக்கள், காலியிடங்கள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களில் சந்தன மரங்கள் உள்ளன. மாநகரின் மத்திய பகுதியான ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகம், வன அலுவலர் குடியிருப்பு, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகம், காவல் துறை ஆணையர் போன்ற அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன.

Advertisement

இந்த பகுதிகளில் உள்ள சந்தன மரங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம கும்பல் தொடர்ந்து வெட்டி கடத்தி வந்தனர். இதனை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இதனால், தற்போது அந்த பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தும் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் வீடுகள், பூங்காக்கள் போன்ற இடங்களில் உள்ள சந்தன மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை காந்திமாநகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில், நேற்றிரவு புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த 4 சந்தன மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர். இதில், சில மரங்களை பாதியாக வெட்டியுள்ளனர். பூங்காவில் சந்தன மரங்கள் பாதியாக வெட்டி கிடப்பதை இன்று காலையில் வாக்கிங் சென்ற அப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சந்தன மரம் வெட்டி கடத்திய மர்ம கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பூங்காவில் இருந்த சந்தன மரங்களை நள்ளிரவில் வெட்டி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News