தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணல் கொள்ளையனை பிடிக்க சென்ற எஸ்.ஐயை குத்தி கொல்ல முயற்சி: வாக்கி டாக்கி பறிப்பு, பெண் கைது,  4 பேருக்கு வலை

விழுப்புரம்: மணல் கொள்ளை வழக்கில் ஒருவரை பிடிக்க சென்ற எஸ்.ஐயை கத்தியால் குத்திவிட்டு வாக்கி டாக்கியை பறித்து சென்ற கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே பி.குச்சிபாளையத்தை சேர்ந்தவர் சுதாகர் (31). மணல் திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர். இவர், தலைமறைவாக இருந்து போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்து உள்ளார். தீபாவளியை கொண்டாட சுதாகர் தனது வீட்டுக்கு வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து.

Advertisement

இதையடுத்து அவரை கைது செய்ய தாலுகா காவல் நிலைய எஸ்.ஐ. குணசேகரன் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சுதாகர் மற்றும் அவரது சகோதரர் பாலாஜி (28), மனைவி பிரபாவதி (26), தாய் தமிழரசி, தந்தை தட்சிணாமூர்த்தி உள்ளிட்டவர்கள் சேர்ந்து எஸ்.ஐ. குணசேகரனை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து அவரது தொண்டையில் கத்தியால் குத்தி உள்ளனர்.

மேலும் அவரது வாக்கி டாக்கியையும் பறித்து கொண்டு தலைமறைவாகி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த எஸ்.ஐ. குணசேகரன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சுதாகர் உள்ளிட்ட 5 பேர் மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சுதாகர் மனைவி பிரபாவதி கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவான சுதாகர் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement