தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிக மணல் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்ட உ.பி., பிகார், குஜராத் மாநிலங்கள் ED கண்ணுக்கு தெரியவில்லை - தமிழ்நாடு அரசு

சென்னை : மணல் கொள்ளை தொடர்பாக அளித்த தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு டிஜிபிக்கு எப்படி உத்தரவிட முடியும்? என அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழகத்தில் நடந்து வரும் கொள்ளை தொடர்பான வழக்குகளில் மாநில அரசு ஒத்துழைக்கக் கோரியும், அமலாக்கத்துறை தகவலின் பேரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிடக் கோரியும் அமலாக்கத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று (அக்டோபர் 31) நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி. அருண் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மணல் கொள்ளை தொடர்பான தகவல் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு எப்படி உத்தரவிட முடியும்? என்று அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.

Advertisement

இதற்கு பதில் அளித்த அமலாக்கத்துறை, வழக்கு பதிவு செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்ய PMLA சட்டத்தில் அனுமதி உள்ளது என்று குறிப்பிட்டது. அப்போது குறுக்கிட்ட, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், எப்.ஐ.ஆர் பதிவு செய்வது அமலாக்கத்துறையின் தனியுரிமை அல்ல. தகவல்களை அனுப்பி வழக்குப்பதிவு செய்ய கூறினால் அதை ஏற்க மாநில போலீஸ் ஒன்றும் போஸ்ட் மாஸ்டர் அல்ல’ என்று வாதிட்டார். மேலும், பெரிய அளவிலான ஊழல்கள் உ.பி, பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் நடந்தாலும் அமலாக்கத்துறைக்கு தமிழகத்தின் மீது மட்டுமே கண் இருக்கிறது என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Advertisement