சனாதன தர்மம் குறித்து பேசிய வழக்கில் அமைச்சர் உதயநிதிக்கு ஜாமீன்: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு
Advertisement
அம்மனு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் ஆஜராக முறைப்படி நான்கு பேர் சார்பில் அவகாசம் கோரியிருந்த நிலையில் விசாரணையை ஜூன் 25ம் தேதிக்கு பெங்களூரு நீதிமன்றம் ஒத்தி வைத்தது. அதன்படி இவ்வழக்கு நேற்று நீதிபதி சரவணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது உதயநிதி ஸ்டாலின் சார்பில் வழக்கறிஞர்கள் வில்சன், என்.ஆர்.இளங்கோ, பாலாஜிசிங் ஆகியோர் ஆஜராகினர். வழக்கில் அமைச்சர் உதயநிதிக்கு ஜாமீன் வழங்கி விசாரணையை ஆக.8க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Advertisement