தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சனாதன தர்மம் குறித்து பேசிய வழக்கில் அமைச்சர் உதயநிதிக்கு ஜாமீன்: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: சனாதன தர்மத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் தமிழ்நாடு இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. சென்னையில் நடந்த சனாதன எதிர்ப்பு மாநாட்டில் சனாதனம் குறித்து தனது கருத்தை உதயநிதி பதிவு செய்தார். இைத எதிர்த்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகளுக்கான நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் உதயநிதி ஸ்டாலின் மட்டுமின்றி அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.
Advertisement

அம்மனு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் ஆஜராக முறைப்படி நான்கு பேர் சார்பில் அவகாசம் கோரியிருந்த நிலையில் விசாரணையை ஜூன் 25ம் தேதிக்கு பெங்களூரு நீதிமன்றம் ஒத்தி வைத்தது. அதன்படி இவ்வழக்கு நேற்று நீதிபதி சரவணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது உதயநிதி ஸ்டாலின் சார்பில் வழக்கறிஞர்கள் வில்சன், என்.ஆர்.இளங்கோ, பாலாஜிசிங் ஆகியோர் ஆஜராகினர். வழக்கில் அமைச்சர் உதயநிதிக்கு ஜாமீன் வழங்கி விசாரணையை ஆக.8க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Advertisement

Related News