தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சனாதன சக்திகளின் பிரித்தாளும் சூழ்ச்சி குறித்து விழிப்புணர்வு டிச.2 முதல் வைகோ சமத்துவ நடைபயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் துவக்கி வைக்கிறார்

சங்கரன்கோவில்: சனாதன சக்திகளின் பிரித்தாளும் சூழ்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மதிமுக மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணத்தை வரும் டிச. 2ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் துவக்கி வைக்க உள்ளதாக வைகோ தெரிவித்தார். மதிமுக சமத்துவ நடைபயணத்திற்கு வீரர்கள் தேர்வு, அக்கட்சியின் பொதுச்செயலாளரான வைகோவின் சொந்த கிராமமான தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா, கலிங்கப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது.

Advertisement

இதற்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து திரளாகப் பங்கேற்ற தொண்டர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை நிரப்பிக் கொடுத்தனர். இதையடுத்து அவர்களை தொண்டரணி, இளைஞரணி, மாணவரணி என 3 வகையாக பிரித்து நேர்காணல் நடத்தி தேர்வு செய்த வைகோ, நடைபயணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கிக் கூறினார்.

இதைத்தொடர்ந்து வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘வைதீக, சனாதன சக்திகளின் பிரித்தாளும் சூழ்ச்சி குறித்தும், போதை பொருட்கள் தடுப்பு குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமத்துவ நடைபயணத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், வரும் டிச. 2ம் தேதி திருச்சி உழவர் சந்தையில் இருந்து துவங்கி வைக்க உள்ளார்.

துவக்க விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்களான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதையடுத்து மணப்பாறையில் கம்யூனிஸ்ட் கட்சியினரும், கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். மதுரையில் டிச. 12ம் தேதி நடைபெறும் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் வைரமுத்து, நடிகர் சத்யராஜ், மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி, பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்’’ என்றார்.

Advertisement