சமாஜ்வாடி தலைவர் அசம் கானுக்கு ஜாமீன்
பிரயாக்ராஜ்: உபி முன்னாள் அமைச்சரும் சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவருமான அசம் கான் மீது 80க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது சீதாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வீட்டை காலி செய்ய மிரட்டிய வழக்கில் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்த்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதி சமீர் ஜெயின் ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement