தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேலத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது

திண்டுக்கல்: தூத்துக்குடியைச் சேர்ந்த மதன் நேற்று சேலத்தில் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மதன் என்கிற அப்பு தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்து அதற்கு நிபந்தனை ஜாமின் பெற்று சேலம் மாநகர் எல்லைக்குட்பட்ட அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் நாள்தோறும் காலை மற்றும் மாலை இரு வேளைகளில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதன் அடிப்படையில் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த 10ம் தேதியிலிருந்து காலை மற்றும் மாலை இரண்டு வேளைகளில் கையெழுத்து போட்டு வந்துள்ளார்.
Advertisement

இந்த நிலையில் இன்று வழக்கம் போல் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் தன் மனைவியோடு காலை உணவு சாப்பிடவந்த மதனை திடீரென உணவகத்தின் உள்ளே புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே மதன் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாநகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உணவகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள அஸ்தம்பட்டி காவல்துறையினர் தப்பியோடிய 6 பேர் கொண்ட கும்பலை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களில் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த 4 பேர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Advertisement