தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேலம் அருகே மர்மநபர்கள் வெறிச்செயல் கட்டையால் அடித்து மூதாட்டி படுகொலை: காதோடு கம்மலை அறுத்துச் சென்ற கொடூரம்

இளம்பிள்ளை: சேலம் அருகே மூதாட்டியை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்து, காதோடு கம்மல் மற்றும் மூக்குத்தியை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேலத்தை அடுத்த கொண்டலாம்பட்டி வேம்படிதாளம் இந்திராநகர் ரயில்வே குடியிருப்பில் வசித்தவர் மாரியம்மாள் (85). இவருக்கு தனபால் (56) என்ற மகன் உள்ளார். கடந்த 40 ஆண்டுக்கு முன் ரயில்வேத்துறையில் ஊழியராக வேலை பார்த்த தங்கவேல் இறந்து விட்ட நிலையில், வாரிசு அடிப்படையில் தனபாலுக்கு கீமேன் வேலை கிடைத்துள்ளது.

Advertisement

இதனால், அந்த ரயில்வே குடியிருப்பிலேயே தனபால், மனைவி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார். அதே வீட்டில் தாய் மாரியம்மாளும் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் வெளிபுறத்தில் மாரியம்மாள் படுத்து தூங்கினார். இரவு பணிக்கு சென்றிருந்த மகன் தனபால், நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்தபோது, மாரியம்மாள் தலையில் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

அவரது காது அறுக்கப்பட்டு, அதிலிருந்த தோடு மற்றும் மூக்குத்தி என முக்கால் பவுன் நகையும், காலில் அணிந்திருந்த 200 கிராம் வெள்ளி காப்பும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி கொண்டலாம்பட்டி போலீசில் தனபால் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வந்து விசாரித்தனர். அதில், ரயில்வே குடியிருப்பில் ஒதுக்குப்புறமான வீடு என்பதால், அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் மிக குறைவாகவே இருந்துள்ளது.

நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், மூதாட்டி மாரியம்மாளை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்து, அவரது காதில் கிடந்த தோடை கழற்ற முடியாமல், காதோடு அறுத்தும், மூக்குத்தியை கழற்றியும் எடுத்துள்ளனர். ஒரு காதில் இருந்து ேதாடை அறுத்து எடுத்ததில், திருகாணி மட்டும் கீழே விழுந்து கிடந்தது. நகை பறிக்கும் நோக்கில் வந்து, இக்கொலையை மர்மநபர்கள் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. மூதாட்டி இறந்து கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்ற நாய், மீண்டும் அதே இடத்திற்கு வந்தது. இக்கொலை, கொள்ளையில் 2 பேர் ஈடுட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர். இரவு நேரத்தில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் இருந்ததா? என அப்பகுதி மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News