தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலூர் டிஐஜி வீட்டில் ரூ4.25 லட்சம் திருடியதால் தாக்குதல்; சேலம் சிறையில் கிருஷ்ணகிரி கைதியிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை: வாக்குமூலம் வீடியோவில் பதிவு

Advertisement

சேலம்: வேலூர் சிறை டிஐஜி வீட்டில் ₹4.25 லட்சம் திருடிய விவகாரத்தில் தாக்குதலுக்கு ஆளான ஆயுள் கைதியிடம் சேலம் சிறையில் சிபிசிஐடி எஸ்.பி. தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (30). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, சிறைத்துறை டிஐஜி வீட்டு வேலைக்கு அழைத்து சென்றனர். அப்போது வீட்டிற்குள் இருந்த ₹4.25 லட்சம் பணத்தை அவர் திருடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சிறையில் தனியறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக அவரது தாய் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பாக வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் விசாரணை நடத்த உத்தரவிட்டனர். அவரது அறிக்கையின் அடிப்படையில் கைதி சிவக்குமாரை சேலம் சிறைக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள், சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிற 17ம் தேதிக்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இதன்படி ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அதே நேரத்தில் வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறை அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் கைதி சிவக்குமாரிடம் விசாரணை நடத்த வேலூர் சிபிசிஐடி எஸ்.பி. வினோத் சாந்தாராம் தலைமையில் சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி சசிதர், சேலம் டிஎஸ்.பி. சென்னீஸ் இளங்கோ, இன்ஸ்பெக்டர் இந்திரா, எஸ்.ஐ. அசோக்குமார், ஏட்டு சூரியபிரபு ஆகியோர் 3 கார்களில் இன்று காலை 10 மணிக்கு வந்தனர். அங்கு கூடுதல் கண்காணிப்பாளர் அறையில் வைத்து கைதி சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதனை வீடியோவில் பதிவு செய்தனர். ஏற்கனவே கைதி சிவக்குமாரிடம் வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தி அறிக்ைக கொடுத்துள்ளார். அதன்அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளதால் மேலும் 2 பேர் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.

Advertisement