தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேலம் அருகே கூட்டுறவு சங்கத்தில் அதிமுக ஆட்சியில் ரூ.1 கோடி கையாடல் உதவி செயலர், எழுத்தர் டிஸ்மிஸ்

சேலம்: சேலம் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1கோடி மோசடி செய்த உதவி செயலாளர், தலைமை எழுத்தரை டிஸ்மிஸ் செய்து செயலாட்சியர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2017 முதல் 2020 வரை (அதிமுக ஆட்சியில்) பயிர்கடன் உள்பட பல்வேறு இனங்களில் ரூ.3.63 கோடி அளவிற்கு மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கூட்டுறவு உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி கூட்டுறவு சங்க செயலாளர் மோகன், உதவி செயலாளர் மணி, தலைமை எழுத்தர் ரவிக்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தனர்.
Advertisement

இதுதொடர்பான புகாரின்படி சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து செயலாளர் மோகன், தலைவராக இருந்த சத்யபானு, உதவி செயலாளர் மணி, தலைமை எழுத்தர் ரவிக்குமார் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கூட்டுறவு துணை பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து வெள்ளரிவெள்ளி கூட்டுறவு சங்க செயலாட்சியர் கவிதா விசாரணை நடத்தினார். இதில் உதவி செயலாளர் மணி, தலைமை எழுத்தர் ரவிக்குமார் ஆகியோர் ரூ.1.08 கோடி கையாடல் செய்தது உறுதியானது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். செயலாளர் மோகன் மீதும் விரைவில் நடவடிக்கை பாயும் என தெரிகிறது.

Advertisement