தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேலத்தில் கலைஞர் சிலை அவமதிப்பு

சேலம்: சேலம் 4 ரோடு அண்ணா பூங்கா அருகில் முன்னாள் முதல்வர் கலைஞரின் முழுஉருவ வெண்கல சிலை 16 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை கலைஞர் சிலையின் வலது பகுதியில் கருப்பு பெயின்ட் ஊற்றப்பட்டிருந்தது. மேலும், சிலைக்கான 4 அடி பீடம் முழுவதும் கருப்பு பெயின்ட் பூசப்பட்டிருந்தது. இதனை கண்ட அவ்வழியாக சென்றவர்கள், இதுகுறித்து கட்சியினருக்கு தகவல் அளித்தனர்.
Advertisement

தகவலறிந்து போலீசாரும், திமுகவினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். தடய அறிவியல் துறையினரும், அங்கு வந்து சிலை பகுதியில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசாரின் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தபோது, நேற்று அதிகாலை வயதான ஒருநபர் கையில் பெயின்ட் டப்பாவுடன் செல்வதும், கலைஞர் சிலை அருகில் உள்ள மின்சார இணைப்பை துண்டிப்பதும் பதிவாகியுள்ளது.

மின் இணைப்பை துண்டித்த அந்த நபர், அங்கிருந்த 5 அடி நீள குச்சியின் ஒரு பகுதியில் துணியை கட்டி, அதன்மூலம் பெயின்டை எடுத்து கலைஞரின் சிலை மீது பூசியுள்ளார். பின்னர், சிலையின் கீழே உள்ள பீடத்திலும், பரவலாக பெயின்ட்டை ஊற்றிவிட்டு சென்றுள்ளார். அந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News