தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேலம் அருகே பரபரப்பு 2 மூதாட்டிகள் கொலை? நகைக்காக நடந்ததா?

இளம்பிள்ளை: சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை தூதனூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி பெரியம்மா(75). இவர், ஆடுகளை வளர்த்து வந்தார். அருகே உள்ள இ.காட்டூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி பாவாயி(70). இவர், விவசாய கூலிவேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் பெரியம்மா வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. அதேபோல், பாவாயியும் திடீரென மாயமானார். இந்நிலையில், நேற்று காலை தூதனூர் காட்டுவளவு பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் மிதந்த பெரியம்மா, பாவாயி ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன. பெரியம்மா அணிந்திருந்த இரண்டு தோடு, மூக்குத்தி, கால் காப்பு. பாவாயி அணிந்திருந்த தோடு, கால் காப்பு ஆகியவை மாயமாகியிருந்தது தெரிய வந்தது. கல்குவாரியின் அருகே சாலையோரம் தங்கியிருந்த சேலம் அடுத்த கருப்பூர், வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யனார்(55) என்பவரை நேற்று முன்தினம் இரவு முதல் காணவில்லை எனவே, அவர் நகைக்காக மூதாட்டிகளை கொலை செய்து, உடல்களை குவாரி குட்டையில் வீசிச்சென்றாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Related News