தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேலம் அருகே சோகம் மாயமான 8 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு

Advertisement

*நீச்சல் பழகியபோது மூழ்கி உயிரிழப்பு

சேலம் : சேலம் அருகே மாயமான பள்ளி மாணவனை போலீசார் தேடி வந்தநிலையில், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டான். நீச்சல் பழகிய போது மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம் மல்லூர் அருகேயுள்ள நிலவாரப்பட்டி மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். கூலித்தொழிலாளி.

இவரது மகன் நிஷாந்த் (8), அரசுப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் காலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நிஷாந்த், திடீரென அங்கிருந்து மாயமானான். இதனால், அதிர்ச்சியடைந்த சக்திவேல் மற்றும் உறவினர்கள் அப்பகுதி முழுவதும் தேடினர். ஆனால், சிறுவன் நிஷாந்தை காணவில்லை.

இதுகுறித்து மல்லூர் போலீசில் சக்திவேல் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலாஜிரமணன் தலைமையிலான போலீசார் சிறுவன் மாயம் என வழக்குப்பதிவு செய்து, தேடி வந்தனர்.

இதனிடையே சக்திவேலின் வீட்டின் அருகே திறந்தவெளி கிணறுகள் உள்ளன.

இதனால் சிறுவன் நிஷாந்த், அதில் ஏதேனும் ஒரு கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை முதல் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், அப்பகுதியில் உள்ள 5 கிணறுகளில் தேடினர். ஆனால், எங்கும் கிடைக்கவில்லை.

நேற்று மதியம், சக்திவேலின் வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள தனபால் என்பவரது விவசாய கிணற்றில் சிறுவன் நிஷாந்த் சடலமாக மிதந்தான். அந்த கிணற்றில் 5 லிட்டர் குடிநீர் கேனும் மிதந்தது. இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறியழுதனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சிறுவன் நிஷாந்தின் சடலத்தை மீட்டனர். போலீசார், சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுவன் நிஷாந்த், உடலில் கேனை கட்டிக்கொண்டு நீச்சல் பழக கிணற்றில் இறங்கியிருக்கலாம் என்றும், அப்போது கயிறு அவிழ்ந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுவனுடன் வேறு யாரேனும் குளிக்க சென்றார்களா? என்ற கோணத்திலும், அவன் எவ்வாறு உயிரிழந்தான் என்பது பற்றியும் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாயமான சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement