தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேலம் மாநகர் மாவட்ட நாதக செயலாளர் விலகல்: சீமான் செயல்பாடு சரியில்லை என குற்றச்சாட்டு

Advertisement

சேலம்: நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்டசெயலாளர் கட்சியிலிருந்து விலகி உள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சர்வாதிகாரிபோல செயல்படுவதும், யாரையும் பேச அனுமதிக்காமல் இஷ்டமிருந்தால் இரு, இல்லையென்றால் ஓடு என்று கூறுவதாலும், பல மாவட்ட நிர்வாகிகள் அக்கட்சியை விட்டு விலகி வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை, அக்கட்சியை விட்டு விலகுவதாக தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், நாம் தமிழர் கட்சியின் மாநகர் மாவட்டசெயலாளர் என்ற பொறுப்பில் இருந்தும், கட்சியிலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

இதுநாள் வரை என்னோடு உடனிருந்து ஒத்துழைப்பு கொடுத்த தோழமைகள் அனைவருக்கும் என் நன்றி’ என தெரிவித்துள்ளார். இதுகுறித்து தங்கதுரை கூறுகையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடு சரியில்லாத காரணத்தினாலும், எங்களின் கருத்துக்களை அவர் கேட்காததாலும், அவரை சுற்றியுள்ள 4 பேர் சொல்வதை மட்டும் கேட்டு செயல்பட்டு வருவதாலும் அதிருப்தி அடைந்து கட்சியில் இருந்து விலகி விட்டேன் என்றார். சேலம் அழகாபுரத்தை சேர்ந்த தங்கதுரை, நாதகவில் 5 ஆண்டுகளாக மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement