தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேலம் அருகே மாட்டை கொன்ற சிறுத்தை கேமராவில் சிக்கியது

சேலம்: சேலம் அருகே மாட்டை அடித்து கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த சிசிடிவி கேமராக்களில் பதிவானது. அந்த சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து வன ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.
Advertisement

சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலைத்தொடரில் கடந்த 5 மாதத்திற்கும் மேலாக ஒரு சிறுத்தை சுற்றி வருகிறது. டேனிஷ்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட காடையாம்பட்டி வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்கு வந்த சிறுத்தை, ஆடு, மாடுகளை அடித்துக் கொன்றது. பின்னர், மேச்சேரி பகுதிக்கு இடம் பெயர்ந்தது. அந்த பகுதியிலும் வனத்தை ஒட்டிய கிராமத்திற்கு வந்து மாட்டை அடித்துக் கொன்று சாப்பிட்டுச் சென்றது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் இடைப்பாடி அருகேயுள்ள பக்கநாடு ஊராட்சி கோம்பைக்காடு பகுதிக்கு சிறுத்தை வந்தது. அங்கு மாதையன் என்பவரது வீட்டில் கட்டப்பட்டிருந்த மாட்டை அடித்துக் கொன்று, சுமார் 200 அடி தூரத்திற்கு இழுத்துச் சென்று சாப்பிட்டது.

இதையடுத்து அப்பகுதியில் 13 இடங்களில் சிசிடிவி கேமராக்களை வனத்துறையினர் வைத்தனர். மீண்டும் அந்தப்பகுதிக்கு வந்த சிறுத்தை, அந்த கேமராக்களில் பதிவாகியுள்ளது. அக்காட்சிகளை கொண்டு, ஏற்கனவே டேனிஷ்பேட்டை, மேச்சேரி பகுதிக்கு வந்த அதே சிறுத்தைதான் என்பதை வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து தற்போது, பக்கநாடு கோம்பைக்காடு பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். அந்த கூண்டிற்குள் ஆட்டை கட்டி போட்டு வைத்துள்ளனர். அதனால், மீண்டும் அந்த பகுதிக்கு சிறுத்தை வந்தால் கூண்டில் சிக்கும் என வனத்துறை ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement

Related News