தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சம்பளதாரர்களை தண்டிக்கிறது மோடி அரசு புதிய பிஎப் விதிகளை திரும்ப பெற வேண்டும்: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) திட்டத்தில் புதிய விதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இது குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: மோடி அரசின் புதிய பிஎப் விதிகள் கொடூரமானவை. புதிய விதிகளின்படி, 12 மாதங்கள் வேலையின்மைக்குப் பிறகே (முன்பு 2 மாதமாக இருந்தது) நீங்கள் பிஎப் பணத்தை முழுமையாக எடுக்க முடியும். 36 மாதங்களுக்குப் பிறகே (முன்பு 2 மாதமாக இருந்தது) ஓய்வூதியத்தை எடுக்க முடியும். உங்கள் சொந்த பிஎப் கணக்கில் எப்போதும் 25 சதவீத பணத்தை வைப்பு நிதியாக பராமரிக்க வேண்டும்.

Advertisement

இதனால் யாருக்கு லாபம்? நிச்சயமாக தொழிலாளர்களுக்கு அல்ல. வேலையை இழக்கும் தொழிலாளி அல்லது ஓய்வு பெற்ற ஒருவரை கற்பனை செய்து பாருங்கள். மோடி அரசு தனது நெருங்கிய நண்பர்களுக்காக லட்சக்கணக்கான கோடிகளை தள்ளுபடி செய்கிறது. இது சீர்திருத்தம் அல்ல, கொள்ளை. ஒன்றிய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் முடிவுகள் பிஎப்-ஐ நம்பி வாழும் ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை அழித்துவிடும். இதில் பிரதமர் மோடி தயவுசெய்து தலையிட வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகல கூறுகையில், ‘‘புதிய பிஎப் விதிகள் அதிர்ச்சியூட்டும் அபத்தமானவை. இது சம்பளம் வாங்குபவர்களின் பணத்தை வெளிப்படையாக திருடுவதற்கு சமம். ஒருவர் வேலையை இழந்தவுடன் பணத்தேவை ஏற்படும் நிலையில், 12 மாதத்திற்கு பிறகே பிஎப் பணம் கிடைக்கும் என்றால் அவர் என்ன செய்வார்? மோடி அரசு பொருளாதாரத்தை தவறாக கையாண்டதற்காக சம்பளம் வாங்குபவர்களை தண்டிக்கிறது’’ என்றார்.

இந்த புதிய விதிகளை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement