தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.100-150 கோடி சம்பளம் கிடையாது‌; விகிதாச்சார அடிப்படையில் நடிகர்களுக்கு ஊதியம்: திருப்பூர் சுப்ரமணியம் வலியுறுத்தல்

திருப்பூர்: தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், நேற்று திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அது வருமாறு: சமீப காலமாக தென்னிந்திய சினிமா அதல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. பெரிய அளவிலான படங்கள் வெளியாவதில்லை. ரூ.100-150 கோடி என்று சம்பளம் வாங்கியவர்கள், இன்று வேலை இல்லாமல் வீட்டில் இருக்கின்றனர். காரணம், அதிகப்படியான சம்பளம் கொடுத்த நிறுவனங்கள் இன்று மூடப்பட்டுள்ளது. திரையரங்குகளுக்கு படங்கள் முழுமையாக வருவது இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக புதிய படங்களை 8 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், அதன் பாதிப்பு இன்று தெரிகிறது. யாருடைய படத்தையும் ரிலீஸ் செய்ய முடியவில்லை.

Advertisement

சிகை அலங்கார நிபுணருக்கு பேட்டா, ஹீரோவின் பவுன்சருக்கு பேட்டா, பெட்ரோல் என்று அனைத்தையும் தயாரிப்பாளரிடம் வசூலித்ததால், பல தயாரிப்பு நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தது. பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் சொந்தப் படம் எடுக்க விரும்புவதில்லை. பெரிய ஹீரோக்கள் தயாரிப்பாளர்களை நல்லபடியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வீண்செலவுகளை தவிர்த்தால் சினிமா தொழில் சிறப்படையும். சிறுபடங்கள் எடுப்பவர்கள் கூட கதைக்கருவை மையமாக வைத்து எடுக்கின்றனர். ஆனால், பெரிய படங்களில் நடிகர்களை மையப்படுத்தி எடுக்கிறார்கள். சில படங்கள்தான் ரீ-ரிலீசில் சாதித்தன.

இனி நடிகர்களுக்கு சம்பளம் கிடையாது‌. விகிதாச்சார அடிப்படையில்தான் ஊதியம் என்பதை வலியுறுத்த முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகிய முத்தரப்பு நேரடி கூட்டம் நடத்தி ஆலோசனை செய்யப்படும். அதில் சினிமா துறையை நலிவில் இருந்து மீட்க தேவையான ஆலோசனைகளை வலியுறுத்தி தீர்வு காணப்படும்.

Advertisement