தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ்க்கு எதிராக களமிறங்கிய இளம் மல்யுத்த வீரர்கள்: 300க்கும் மேற்பட்டோர் டெல்லியில் போராட்டம்

Advertisement

புதுடெல்லி: இந்திய மல்யுத்த விளையாட்டு விவகாரத்தில் திடீர் திருப்பமாக சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத்துக்கு எதிராக 300க்கும் மேலான இளம் வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை துவக்கியுள்ளனர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த புகாரில் பாஜ எம்பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க கோரி வீராங்கனைகள் கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து,மல்யுத்த கூட்டமைப்பு பதவியில் இருந்து அவர் விலகினார். அதன் பிறகு நடந்த மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்சய் சிங் வெற்றி பெற்றார்.

அதற்கு மல்யுத்த வீராங்கனைகளிடம் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து, சாக்‌ஷி மாலிக் மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் தங்கள் விருதுகளை ஒன்றிய அரசிடம் திரும்ப ஒப்படைத்தனர். இந்நிலையில், உ.பி, அரியானா மாநிலங்களிலிருந்து வந்த 300க்கும் மேற்பட்ட இளம் வீரர், வீராங்கனைகள் நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு போட்டியில் எதுவும் கலந்து கொள்ள முடியாததால், தங்கள் வாழ்வில் ஒரு ஆண்டு விரையம் ஆனதாகவும் அதற்கு மாலிக், பஜ்ரங், வினேஷ் ஆகியோர் தான் காரணம் என்று குற்றம் சாட்டினர். மூத்த வீரர்களுக்கு எதிராக இளம் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News