தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பாம்பன் கடலில் ‘பகீர்’ பயணம்: தடையை மீறியதால் மரைன் போலீசார் விசாரணை

ராமேஸ்வரம்: பாம்பன் கடலில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நாட்டுப்படகில் சுற்றுலாப் பயணிகள் சென்றது பற்றி மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement

ராமேஸ்வரம், தனுஷ்கோடி வரும் சுற்றுலாப் பயணிகளை மீன்பிடி படகுகளில் ஏற்றிச் செல்ல தடை உள்ளது. விதிகளை மீறி லாப நோக்கத்திற்காக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் மீனவர்கள் மீது அவ்வப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாம்பன் கடலில் நாட்டுப்படகு ஒன்றில் 10க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு பாலத்தை நேற்று சுற்றி பார்த்தனர். படகில் பயணம் செய்த எவரும் பாதுகாப்பு உபகரணங்கள் அணியவில்லை.

படகிலும் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் எடுத்துச் செல்லவில்லை. படகில் இருந்தவர்கள் ஆபத்தை உணராமல் நின்றபடி செல்பி எடுத்துக்கொண்டு இருந்தனர். பாம்பன் கால்வாய் பகுதியில் காற்றின் வேகத்தால் நீரோட்டம் வேகமாக இருந்தது. ரயில் பாலங்கள் கீழே தடையை மீறி அபாயகரமாக படகில் கடந்து சென்றனர். உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தடையை மீறி நாட்டுப்படகில் ஆட்களை ஏற்றியது குறித்து மீனவர்களிடம் மரைன் போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisement