தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாதுகாப்பு விதிகளை மீறுகிறார் ராகுல் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்: சிஆர்பிஎப் எச்சரிக்கை

புதுடெல்லி: பாதுகாப்பு விதிகளை மீறும் ராகுல் காந்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அவ்வப்போது பல்வேறு நடை பயணங்களை மேற்கொண்டு வருகிறார். மேலும் வௌிநாடுகளுக்கும் சுற்று பயணம் சென்று வருகிறார். ராகுல் காந்தி இந்த பயணங்களின்போது பாதுகாப்பு விதிகளை மீறுவதாக மத்திய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மத்திய பாதுகாப்பு படை எழுதியுள்ள கடிதத்தில், “மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு(55) மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விஐபி பாதுகாப்பு பிரிவு இசட் பிளஸ் ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குகிறது. மேலும், மேம்பட்ட பாதுகாப்பு இணைப்பின் ஒருபகுதியாக ராகுல் காந்தி பார்வையிட வேண்டிய இடங்களை இந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விஐபி பாதுகாப்பு பிரிவு இசட் பிளஸ் ஆயுதமேந்திய போலீஸ் முன்கூட்டியே உளவு பார்க்கிறது. ஆனால் ராகுல் காந்தி தன் உள்நாட்டு பயணங்களின் போதும், வௌிநாட்டு பயணங்களின் போதும் பலமுறை பாதுகாப்பு விதிமுறைகளை மீறி உள்ளார். இது அவருடைய உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்ள சிஆர்பிஎப் வலியுறுத்துகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement