தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு: புதிய தந்திரி பொறுப்பேற்பு

Advertisement

திருவனந்தபுரம்: சிங்க மாதம் எனப்படும் ஆவணி திங்கள் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (16ம் தேதி) மாலை திறக்கப்படுகிறது. அடுத்த ஓராண்டுக்கான தந்திரியாக கண்டரரு ராஜீவரரு பொறுப்பேற்கிறார். கீழ் சாந்தி தேர்வும் நடக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுகிறார். பக்தர்களுக்கு திருநீறு பிரசாதம் வழங்கப்படும். மற்றபடி இன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பூஜைகளுக்கு தலைமை வகிக்கும் தந்திரி பொறுப்பு தாழமண் குடும்பத்திடம் உள்ளது. இந்த குடும்பத்தில் தற்போது கண்டரரு ராஜீவரரு, மகேஷ் மோகனரரு என 2 தந்திரிகள் உள்ளனர். சுழற்சி முறையில் இவர்கள் தந்திரி பொறுப்பை நிர்வகிக்கின்றனர். 2023 ஆகஸ்ட் முதல் தந்திரி பொறுப்பு வகித்து வந்த மகேஷ் மோகனரரு சுற்று முடிந்த நிலையில், இன்று முதல் தந்திரி பொறுப்பை கண்டரரு ராஜீவரரு ஏற்கிறார். அவருடன் அவரது மகன் பிரம்ம தத்தனும் பூஜைகளில் கலந்து கொள்கிறார்.

நாளை (17ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் கண்டரரு ராஜீவரரு மற்றும் பிரம்ம தத்தன் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து பூஜைகளை தொடங்கி வைப்பர். தொடர்ந்து கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு உஷ பூஜை, மதியம் 12.30 மணிக்கு உச்ச பூஜை, களபாபிஷேகம், மாலை தீபாராதனை, இரவு புஷ்பாபிஷேகம், படி பூஜை, அத்தாழ பூஜை நடக்கிறது. சபரிமலையில் ஐயப்பனுக்கு நிவேத்யங்கள் செய்ய, பூஜைகளில் உதவ நியமிக்கப்படும் கீழ்சாந்தி குலுக்கல் தேர்வும் நாளை (17ம் தேதி) காலை 8 மணிக்கு நடக்கிறது. கோயிலில் எல்லா நாட்களிலும் காலை முதல் மாலை வரை உதயாஸ்தமன பூஜை, இரவு 7 மணிக்கு படிபூஜை நடக்கிறது. பூஜைகள் முடிந்து ஆகஸ்ட் 21ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

Advertisement

Related News