தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சபரிமலையில் மண்டலகாலம் முதல் ஆன்லைன் முன்பதிவுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்க முடிவு

திருவனந்தபுரம்: இவ்வருட மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டலகால பூஜைகள் தொடங்குகின்றன. டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. கொரோனா காலத்திற்குப் பின்னர் சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டது. இதுவரை ஆன்லைன் முன்பதிவுக்கு பக்தர்களிடம் இருந்து கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை.

Advertisement

இந்நிலையில் சபரிமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மரணமடைந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு இந்த மண்டலகாலம் முதல் ரூ.3 லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கு நிதி சேகரிப்பதற்காக தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் இருந்து ரூ.5 கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது கட்டாயம் அல்ல.விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்த கட்டணத்தை செலுத்தினால் போதும். இதற்காக ஆன்லைன் முன்பதிவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதால் இதுவரை மண்டல காலத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* எந்த பகுதியில் விபத்து நடந்தாலும் இன்சூரன்ஸ்

சாலை விபத்துகளில் மரணமடையும் சபரிமலை பக்தர்களுக்கு ரூ. 5 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த வருடம் அமல்படுத்தப்பட்டது. முதலில் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறும் விபத்துகளில் உயிரிழப்பவர்களுக்கு மட்டுமே இந்தத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் முதல் கேரளாவில் எந்தப் பகுதியில் நடைபெறும் விபத்துகளில் உயிரிழந்தாலும் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement