சபரிமலையில் மண்டல பூஜை தரிசனத்திற்கு இன்று மாலை 5 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு
திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல பூஜை தரிசனத்திற்கு இன்று மாலை 5 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். சபரிமலையில் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு ஆன்லைன் முன் பதிவு மாலை 5 மணிக்கு தொடக்கம். sabarimalasonline.org என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். டிச.26ல் 30,000 பேர், 27 ஆம் தேதி 35,000 பேருக்கு அனுமதிக்கப்படும். ஸ்பாட் புக்கிங்கில் தலா 5,000 பேருக்கே அனுமதி வழங்கப்படும்.
Advertisement
Advertisement