தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சபரிமலை கோயிலில் தங்கம் மாயமான விவகாரம்: 3வது நாளாக கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட தங்கம் மயமான விவகாரத்தில் கேரள சட்டப்பேரவையில் 3வது நாளாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட 30 கிலோவுக்கு அதிகமான தங்கம் மாயமான விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. காலையில் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய உடன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

தங்கம் மயமான விவகாரத்திற்கு பொறுப்பேற்று தேவசம் போர்டு அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். பதாகைகளுடன் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டும் அவர்கள் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் போராட்டத்தால் சட்டபேரவை நடவடிக்கைகள் 3வது நாளாக பாதிக்கப்பட்டன. அவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேவசம் போர்டு அமைச்சர் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், திருவாங்கூர் தேவசம் போர்டின் மூத்த அதிகாரியான முராரி பாபு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலையில் இருந்து நான்கரை கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் தங்கம் முலாம் பூசப்பட்ட சிலையை செம்பு பூசப்பட்ட சிலை என்று ஆவணத்தில் பதிவு செய்ததால் தேவசம் போர்டு முராரி பாபு மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement

Related News