தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சபரிமலை சீசன் எதிரொலி; பொள்ளாச்சி வாரச்சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்தது

பொள்ளாச்சி: சபரிமலை சீசன் துவக்கத்தால் பொள்ளாச்சி வாரச்சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்ததுடன், விற்பனையும் மந்தமாக நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வியாழக்கிழமை தோறும் நடக்கும் வாரச்சந்தை நாளின்போது, ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. ஆடுகளை வாங்க உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் அதிகம் வருகின்றனர்.இதில் கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி அந்நேரத்தில், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வரத்து வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அந்நேரத்தில் ஆடுகள் விற்பனை வழக்கத்தைவிட அதிகமானது.

Advertisement

அதன்பிறகும், கடந்த இரு வாரமாக வெளியூர்களில் இருந்தும் ஆடுகள் வரத்தும் அதிகமாக இருந்தது. சுமார் 800 ஆடுகள் வரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.மேலும் அந்நேரத்தில், ஆடுகளை வாங்க சுற்றுவட்டார பகுதியில் உள்ள வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். ஆனால் நேற்று கூடிய சந்தைக்கு சுற்றுவட்டார பகுதியிலிருந்து சுமார் 300க்கும் குறைவான மாடுகளை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.இருப்பினும் தற்போது சபரிமலை சீசன் துவக்கம் என்பதால், ஆடு விற்பனை மந்தமானது. கடந்த வாரத்தை விட ரூ.2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையிலும் ஒவ்வொரு ஆடும் குறைவான விலைக்கு விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News