தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சபரிமலை கோயிலில் தனிநபர் வழங்கிய ஐயப்பன் சிலை பிரதிஷ்டைக்கு தடை: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

Advertisement

திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலில் தனி நபர் வழங்கும் ஐயப்பன் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்ட ஐயப்பன் சிலையை சபரிமலை கோயிலில் பிரதிஷ்டை செய்ய தனி நபர் ஒருவர் வழங்கி உள்ளார். தனி நபர் வழங்கிய ஐயப்பன் சிலையை சபரிமலை கோயிலில் பிரதிஷ்டை செய்ய திருவாங்கூர் தேவசம் போர்டு சிறப்பு ஆணையர் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து சிலை பிரதிஷ்டை தொடர்பான வழக்கை தானே முன்வந்து விசாரணைக்கு கேரள உயர்நீதிமன்றம் ஏற்று கொண்டது. தனியார் வழங்கிய சிலையை பிரதிஷ்டை செய்யும் அனுமதிக்கு 2 வாரம் தடை விதித்தது நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், முரளி கிருஷ்ணா அமர்வு உத்தரவிட்டது.

பஞ்சலோகத்தில் ஆன ஐயப்பன் சிலையை தனி நபர் ஒருவர் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு நிதி வசூல் செய்துள்ளார். நன்கொடை வழங்குவதற்கு வங்கிக் கணக்கு எண், கியூ ஆர் கோடு, செல்போன் எண்களையும் தனி நபர் அளித்திருக்கிறார். தனி நபர் நன்கொடை வசூல் குறித்து ஏற்கனவே கேரள உயர்நீதிமன்றம் விசாரணை செய்திருந்தது. குறிப்பிட்ட நபருக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என தேவசம் போர்டு விளம்பரப்படுத்தவும் கேரள ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. தனி நபர் வழங்கிய ஐயப்பன் சிலையை பிரதிஷ்டை செய்ய அனுமதி அளித்த கோப்புகளையும் தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், கோப்புகளை ஆராய்ந்ததில், ஆணையரின் அறிக்கை இல்லாமலேயே சிலை பிரதிஷ்டைக்கு தேவசம் போர்டு தலைவர் அனுமதி வழங்கி இருக்கிறார். சிலைக்கு அனுமதி அளித்தது தொடர்பாக ஒருவாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு தேவசம் போர்டு செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலை தயாரிப்பதற்காக வசூலிப்புத் தொகையை வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துவிடாமல் தடுக்குமாறு போலீசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய அனுமதியின்றி நிதி வசூல் செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவும் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

Advertisement

Related News