தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சபரிமலை தங்கம் திருட்டில் தேவசம் போர்டு அதிகாரிகள், உறுப்பினர்களுக்கும் தொடர்பு: கைதான உண்ணிகிருஷ்ணன் பரபரப்பு வாக்குமூலம்

 

Advertisement

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடுகள் மாயமானது. இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி கடந்த சில தினங்களாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. குற்றப்பிரிவு ஏடிஜிபி வெங்கடேஷ் மேற்பார்வையில் எஸ்பிக்கள் ஜோய், சசிதரன் ஆகியோர் தலைமையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. தங்கத் தகடுகள் கொண்டு செல்லப்பட்ட ஐதராபாத், சென்னை அம்பத்தூரில் உள்ள ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம், திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம் போர்டு தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் விசாரணை நடந்தது. தங்கம் திருட்டு தொடர்பாக மொத்தம் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த 2 வழக்குகளிலும் உண்ணிகிருஷ்ணன் போத்தி தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் தவிர தேவசம் போர்டு ஊழியர்கள் 9 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று மதியம் உண்ணிகிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக கொண்டு சென்றனர். பின்னர் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று மதியம் தொடங்கிய விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது.

எஸ்பிக்கள் ஜோய், சசிதரன் ஆகியோர் மாறி மாறி கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் உண்ணிகிருஷ்ணன் போத்தி பல திடுக்கிடும் தகவல்களை போலீசிடம் தெரிவித்து உள்ளார். தங்கத்தை திருடிய விவகாரத்தில் தேவசம் போர்டு உயரதிகாரிகள், முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்பட முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆகவே இந்த வழக்கில் விரைவில் பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே 12 மணிநேரத்திற்கு மேல் நடந்த விசாரணைக்குப் பின்னர் உண்ணிகிருஷ்ணன் போத்தியை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக இன்று அதிகாலை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதைத்தொடர்ந்து இன்று அவரை பத்தனம்திட்டா மாவட்டம் ரான்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் தீர்மானித்து இருக்கின்றனர். அதன்பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் சிறப்பு புலனாய்வுக் குழு திட்டமிட்டு உள்ளது.

Advertisement

Related News